லண்டன் ஒக்ஸ்போர்டு வீதிக்கு அருகில் ஒருவர் குத்தி கொலை!

லண்டன் ஒக்ஸ்போர்டு வீதிக்கு அருகில் உள்ள ஒரு சாலையோரத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

சோஹோவில் உள்ள போலந்து தெருவுக்கு உள்ளூர் நேரப்படி அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், கத்திக் காயங்களுடன் காணப்பட்டார்.

12:20 மணியளவில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல்துறை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடம் ஐரோப்பாவின் பரபரப்பான ஷாப்பிங் பகுதிகளில் ஒன்றாகும், மேலும் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்லும் இடமாகும்.

போலந்து தெருவில் உள்ள அரிராங் என்ற கொரிய உணவகத்தில் பொலிஸ் அதிகாரிகள் காணப்பட்டனர், மேலும் ஒக்ஸ்போர்டு தெருவில் உள்ள ஃபிளனெல்ஸ் என்ற ஆடைக்கடைக்குள்ளும் சென்றனர்.

உணவகத்திற்கு அருகில் வன்முறை வெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். லண்டன் ஆம்புலன்ஸ் சேவை 11:36 மணியளவில் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகக் கூறியது.

லண்டனில் திங்கட்கிழமை நடந்த கத்திக்குத்து உட்பட இந்த ஆண்டு இதுவரை 57 கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor