இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இந்­தி­யா­வில் கிட்­டத்­தட்ட 150 மருத்­துவக் கல்­லூ­ரி­கள் தேசிய மருத்­துவ ஆணை­யத்­தின் அங்­கீ­கா­ரத்தை இழக் கும் ஆபத்தை எதிர்­நோக்­கு­கின்­றதாக அவ்வாடு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரசு, தனி­யார் மருத்­து­வக் கல்­லூரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஆணை­யம் ஆய்வு செய்து அங்­கீ­காரத்தை புதுப்­பித்து வரு­கிறது.

இந்நிலையில் போதிய வச­தி­கள் இன்மை, விதி­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டாமை போன்ற கார­ணங்­க­ளுக்­காக கடந்த இரண்டு மாதங்­களில் 40 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் அங்­கீ­கா­ரத்தை இழந்­துள்ளன.

தமிழகத்தின் முக்கிய கல்லூரிகளும் அடக்கம்
இதில் தமி­ழ­கத்­தின் பிர­பல சென்னை ஸ்டான்லி அரசு மருத்­து­வக் கல்­லூரி, திருச்சி, தர்­ம­புரி அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­களும் அடங்­கும் என கூறப்படுகின்றது.

இந்­நி­லை­யில் தமிழ்­நாடு, புதுச்­சேரி, ஆந்­திரா உள்ளிட்ட எட்டு மாநி­லங்களி­லுள்ள மேலும் பல கல்­லூ­ரி­க­ளின் அங்­கீ­கா­ரம் ரத்­தா­க­லாம் எனவும் கூறப்படுகிறது.

கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் இல்­லா­தது, ஆதா­ரு­டன் இணைந்த பயோ மெட்­ரிக் பதி­வில் குறை­பாடு, ஆசி­ரி­யர்­ பற்­றாக்­குறை போன்ற குறை­பா­டு­கள் கல்லூரிகளில் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரத்து செய்­யப்­படும் மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் 30 நாள்களுக்­குள் ஆணை­யத்­தில் மேல்­முறை­யீடு செய்­ய­லாம். அது நிரா­க­ரிக்­கப்­பட்­டால் சுகா­தா­ர அமைச்­சை நாடலாம் எனவும் கூறப்படுகின்றது .

அதேவேளை இந்தியாவில் 2014ல் 387 ஆக இருந்த மருத்­து­வக் கல்­லூ­ரி­களின் எண்­ணிக்கை 2023ல் 660 ஆக அதி­க­ரித்­துள்­ளதக்க தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor