இளைஞர் ஒருவர் குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு!

புத்தளத்தில் உள்ள விடுதியொன்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை நேற்று (2023.11.15) விற்றராசு குத்தப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் பகுதியை சேர்ந்த மரியதாஸ் கிருஷாந்த 23 வயதுடைய இளைஞராவார். குளியலறையில் வைத்து விற்றராசினை கையில்... Read more »

தந்தையின் வாகனத்தை மோதிய மகன்

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாகனத்தால் மோதிக் கொண்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மோதல் வர்த்தகரான... Read more »
Ad Widget

வான் பாயும் வவுனியா குளங்கள்

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து 93 குளங்கள்... Read more »

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, குருணாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 14,225... Read more »

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து!

மாத்தறையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் கவிழ்ந்ததில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாத்தறையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள்... Read more »

வனவிலங்கு அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

லுனுகம்வெஹர தேசிய வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more »

யாழ் வீடொன்றில் மாயமான தங்க நகைகள்

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் அதே இடத்தைச்... Read more »

இன்றைய வானிலை

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது... Read more »

தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த இளம் பெண் உயிரிழப்பு!

கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே என்ற... Read more »

பணத்திற்காக தந்தையை கொன்ற மகன்

ஓபநாயக்க பிரதேசத்தில் தந்தை ஒருவரை அவரது மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரத்தினபுரி அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்... Read more »