வெடுக்குநாறிமலை பொலிஸாரின் அத்துமீறல்: நீதிகோரி ஆர்ப்பாட்டப் பேரணி

வவுனியாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி... Read more »

வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அத்துமீறல்

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு, அரசாங்கத்திற்குப் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சர்வதேச கவனத்தை ஈர்த்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வைப் பெறவும், உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் நாடாளுமன்ற... Read more »
Ad Widget Ad Widget

மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கு துணை போகின்றதா?

மனிதவுரிமை ஆணைக்குழு சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட கைதிகளை இன்று பார்வையிட்ட பின்... Read more »

வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ்

வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து! இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... Read more »

பூதாகரமாகும் வெடுக்குநாறி விடயம்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிக்கோரி வவுனியா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19 ஆம்... Read more »

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் மேன்முறையீடு

வவுனியா, வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாட்டின் போது, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட எட்டுபேர் மீதும் எந்தவிதமான தவறும் கிடையாது என்பதுடன்,... Read more »

வெடுக்குநாறிமலை சிவராத்திரி வழிபாடுகளை குழப்ப முற்படும் விகாராதிபதி

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதானால், நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி பொலிஸாரால்... Read more »

வவுனியாவில் சாந்தனின் பூதவுடல்: மக்கள் திரண்டு அஞ்சலி

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில்... Read more »

சாந்தனின் பூதவுடல் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு

சாந்தனின் இறுதி ஊர்வலம் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் வவுனியாவில் ஆரம்பமானது. சாந்தனின் பூதவுடல் மக்கள் பெரும் வெள்ளத்திற்கு மத்தியில் வவுனியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக ஆயத்தமாகி வருகின்றனர். Read more »

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிசாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது... Read more »