அரசாங்கம் முச்சக்கரவண்டி மாபியாவுக்கு முடிவுகட்ட தீர்மானம்

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மீட்டர் முறையை பின்பற்றாத முச்சக்கர வண்டி சாரதிகள் நியாயமற்ற கட்டணங்களை அறவிடுவதாக பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள அதிகளவான முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தீவிரவாக பரிசீலனை செய்து வருகிறது.

சில முச்சக்கர வண்டிகள் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு 300 ரூபாவை வசூலித்த சம்பவங்கள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, பயணிகள் போக்குவரத்திற்காக பதிவுசெய்யப்பட்ட அனைத்து முச்சக்கரவண்டிகளையும் எதிர்காலத்தில் மீட்டர் முறைக்கு மாற்றியமைக்க ஏற்கனவே அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

ஒரு லீற்றர் பெற்றோல் 365 ரூபாவாக இருக்கும் நிலையில் முச்சக்கரவண்டி சாரதிகள் ஒரு கிலோ மீட்டருக்கு 300 ரூபா அறவிடப்படுவது நியாயமற்றது என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளதுடன், அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய “அப்“ இன் பிரகாரம் நாடு முழுவதும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரே அளவிலான கட்டணங்களை வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin